Friday, August 21, 2015

நீயில்லா உலகத்தில்...

நிலவே என் உயிர் வாழவே
நீ வேண்டும் அருகினிலே

என் நெஞ்சத்தில் வலி ஏனடி
உன்  சுவாசமே மருந்தாகுமே

நீயில்லா உலகத்தில்
வாழ்வதே பெரும் அவஸ்தையடி

சாகட்டும் உயிர் போகட்டும்
வாழட்டும் என் காதல் மட்டும்

நெஞ்சங்கள் உயிர் வாழவே
நம் காதலே உயிர் மூச்சாகுமா

காதலில் பிரிவை உருவாக்கினாய்
அந்த பிரிவினால் எனை நீ ரணமாக்கினாய்

என்னுள் பூப்பூக்கும் மரமாக வளர்ந்தாயடி
அந்த மரமின்று வேரொடு சாய்ந்ததடி

தோழி, காதலி என்றிருந்தாய்
அந்த உறவு இன்று வெறும் கானல் நீரா
அது ஒரு காதல் கனா…

வாழ்க்கையின் அழகு காதலென்றேன்
அந்த காதலால் என் வாழ்க்கை இழந்தேனடி
பிரிவினாலே உன் பிரிவினாலே

நினைவில் உன்னுடன் பழகியதை விட
கனவில் உன்னுடன் வாழ்ந்தது அதிகம்
அதுவே இனி நிரந்தரமா..

தாயுண்டு தந்தையுண்டு
தன்னந்தனியா நானுமுண்டு

நான் இல்லை அவள் மனதில்
அவள் உண்டு என் மனதில்

அலைபேசி என் உடலின் அங்கமானதே
அவள் குரல் கேட்க

என் உடல் உயிரற்று போனதே
அவள் என்னை வெறுக்க

நேரமில்லா உலகில் தனியாக
தனியாக தவிக்கிறேன் பிரிவில்

உன்னைக் காண நண்பனைக் கழற்றிவிட்டேன்
நீ என்னைக் கழற்றிவிட

நண்பன் என்னைக் காண வந்தான்
ஆறுதல் சொல்ல…

நீயே உலகமென்று இருந்தேன்
இந்த உலகத்தில் நான் யாரென்று கேட்டாய்

என்னை மறந்து உன்னை நினைத்தேன்
உன்னை மறக்க என்னை தொலைக்கிறேன்...

No comments:

Post a Comment