என் இரயில் பயணத்தில்
நிலவும் என்னுடன் பயணித்தது
நானோ ஜன்னலோரம்
நிலவோ கண்ணுக்கு எட்டிய தூரம்
கட்டிடங்களும் மரங்களுமே அவ்வப்போது
எங்கள் ஈர்ப்பைக் குறைக்கும் சிறூ வில்லன்கள்
அவர்களும் எங்களுக்கு வழிவிட
பெரு வில்லனாய் வந்தது மேகம்
மேகமும் வழிவிடும் என்ற எண்ணத்தில்
கண்மூடி கனவில் நினைத்தேன்
கண் திறந்த போது
நிலவும் மறைந்தது
எங்கள் ஈர்ப்பும் குறைந்ததும்
விடியலால்….
No comments:
Post a Comment