எங்கள் வாழ்க்கையில் என்றும் சிறந்தது
எங்கள் கல்லூரி வாழ்க்கை தான்
அதை நினைக்கையில் எங்கள் மனதில்
வான் மழை தூவுதே
கல்லூரி வானிலே நட்சத்திரங்களாய்
பூத்துக்கிடக்கிறோம் நண்பர்களாக…
நட்பு என்ற மூன்றெத்து மந்திரத்தின்
அர்த்தம் புரிந்ததும் இங்கேதான்
ஆண் பெண் நட்பின்
உன்னதம் புரிந்ததும் இங்கேதான்
உணர்ச்சிகளுக்கும் உண்ர்வுகளுக்கும் உள்ள
உறவு புரிந்ததும் இங்கேதான்
ஆசிரியர் நண்பனானதும்
நண்பன் ஆசிரியரானதும்
இங்கேதான்
வெளி உலகத்தை எங்கள் கண்முன்னே
பார்த்ததும் இங்கேதான்
தேர்விற்காக தேர்வறை வாசலில்
தீவிரமாய் படித்ததும் இங்கேதான்
பயத்தின் பயமான தேர்வு முடிவை
எதிர்பார்த்துக் காத்திருந்ததும் இங்கேதான்
மகிழ்ச்சியின் உச்சங்கள்
துயரத்தின் ஆழங்கள்
இவையனைத்தும் சேர்ந்ததே
நட்பென்றானதே…
கல்லூரி என்ற புல்லாங்குழலிலே
காற்றாய் கனவுகளுடன் நுழைகின்றோம்
கனவுகள் நிறைவேற
இசையாய் வெளிவருகிறோம் நண்பர்களாக…
No comments:
Post a Comment